| 245 |
: |
_ _ |a மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a திருக்கடம்பூர் |
| 520 |
: |
_ _ |a இக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் அமைந்துள்ள 34-வது திருத்தலமாகும். அப்பர் பாடிய கோயில் வகைகளுள் கடம்பூர் திருக்கோயில், கரக்கோயில் வகையினைச் சார்ந்தது. கரக்கோயில் தேர்வடிவத்தில் அமைந்திருக்கும். தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் இதுவாகும். இத்தலத்தினை அப்பர், சம்பந்தர் பாடியுள்ளனர். முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி 1113-ல் அவரது 43–ம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றதை இங்குள்ள கல்வெட்டால் அறியமுடிகிறது. |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழ்நாட்டு சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், சிவன் கோயில், காட்டுமன்னார்குடி, கடலூர், திருக்கடம்பூர், மேலக்கடம்பூர், கீழக்கடம்பூர், கரக்கோயில், தேர் கோயில், முதலாம் குலோத்துங்க சோழன், அமிர்தகடேசுவரர், சோதி மின்னம்மை |
| 700 |
: |
_ _ |a திரு.வேலுதரன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 902 |
: |
_ _ |a 0435-2414 453, 98653 06840 |
| 905 |
: |
_ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலம். திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடியுள்ளனர். |
| 914 |
: |
_ _ |a 11.237119 |
| 915 |
: |
_ _ |a 79.52759 |
| 918 |
: |
_ _ |a சோதிமின்னம்மை, வித்யூஜோதிநாயகி |
| 922 |
: |
_ _ |a கடம்பமரம் |
| 923 |
: |
_ _ |a சக்தி தீர்த்தம், சிவ தீர்த்தம் |
| 924 |
: |
_ _ |a காமிகாகமம் |
| 925 |
: |
_ _ |a மூன்று கால பூசை |
| 926 |
: |
_ _ |a மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை. |
| 927 |
: |
_ _ |a முதலாம் குலோத்துங்க சோழனின் கற்றளியாகும் இக்கோயிலில் அம்மன்னனின் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறைச்சுவர் வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் மேற்கில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். விஷ்ணுவின் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இச்சிற்பத்தின் அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமாலுக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கருவறை விமானத்தின் சுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரின் சிற்பங்களும் இருக்கின்றன. கருவறை விமானத்தில் தென்முகக்கடவுள் புல்லாங்குழல், வீணையுடன் வீணாதரராய் காணப்படுகிறார். வடபுற கோட்டத்தில் உள்ள நான்முகன் சிவனை பூசித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது ஆடல்வல்லானின் நடனக்கோலம் காட்டப்பட்டுள்ளது. வலப்பக்க சுவரில் உமையொருபாகர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே அரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் "ரிஷபதாண்டவமூர்த்தி" நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் செப்புத்திருமேனியாக உற்சவராக இருக்கிறார். இச்செப்புத்திருமேனிக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, ஆரவார விநாயகர் என்று பெயர். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார். இச்சிற்பங்களைத் தொடர்ந்து விமானத்தின் தளத்திலுள்ள சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அவற்றுள் உரோமச முனிவரின் சிற்பம் உள்ளிட்டவை கலைநயமிக்கவை. |
| 930 |
: |
_ _ |a பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை பருகச்சென்றனர். இதைக் கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுத கலசத்தை எடுத்துச் சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். இந்திரனின் தாய் இத்தலத்திறைவனை வழிபட்டு வந்தாள். அவள் முதுமை கருதி, எளிதாக வழிபட இந்திரன் குதிரைகளைப் பூட்டி, இக்கருவறையை இழுத்துச்செல்ல முற்பட்டபோது விநாயகரை வேண்ட மறந்தான். விநாயகரை வேண்டி தன் காரியத்தில் இறங்காததால், விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் கோவிலை ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. இந்திரன் இறைவனை வேண்ட, சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து "தான் இத்தலத்திலேயே இருக்க விரும்புவதாக சொல்லி", இந்திரனை இங்கு வந்து தன்னை வணங்கும் படி கூறினார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். |
| 932 |
: |
_ _ |a அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில் என்ற பெயர்ப் பலகையுடன் முகப்பு வாயில் காணப்படுகிறது. அதையடுத்து ஆலயத்தின் கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம். கொடிமரமில்லை. முன்மண்டபத்திற்கு நேரே மூலவர் கருவறையும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்மன் கருவறையும் உள்ளன. கருவறை தேர் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது. இரண்டு திருச்சுற்றுகளுடன் காணப்படுகின்றது. தேர்வடிவில் அமைந்துள்ள கருவறை விமானம் கரக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. கரம் என்றால் சக்கரம் என்ற பொருளும் உண்டு. மூன்று தளங்களைக் கொண்டதாக இக்கோயில் விமானம் வடிக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கச் சோழனின் கற்றளியான இக்கோயிலின் அமைப்பானது சோழர் கற்றளிகளுள் தனித்துவம் வாய்ந்தது எனலாம். |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a கீழக்கடம்பூர் ருத்திராபதீசுவரர் கோயில், காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோயில் |
| 935 |
: |
_ _ |a சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில் சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மி தொலைவில் கடம்பூர் உள்ளது. காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழக்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூரும் உள்ளன. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம். |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 முதல் பகல் 11.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a மேலக்கடம்பூர் |
| 938 |
: |
_ _ |a காட்டுமன்னார்குடி |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a காட்டுமன்னார்குடி வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000331 |
| barcode |
: |
TVA_TEM_000331 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000331/TVA_TEM_000331_மேலக்கடம்பூர்_அமிர்தகடேசுவரர்-கோயில்-0005.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000331/TVA_TEM_000331_மேலக்கடம்பூர்_அமிர்தகடேசுவரர்-கோயில்-0001.jpg
TVA_TEM_000331/TVA_TEM_000331_மேலக்கடம்பூர்_அமிர்தகடேசுவரர்-கோயில்-0002.jpg
TVA_TEM_000331/TVA_TEM_000331_மேலக்கடம்பூர்_அமிர்தகடேசுவரர்-கோயில்-0003.jpg
TVA_TEM_000331/TVA_TEM_000331_மேலக்கடம்பூர்_அமிர்தகடேசுவரர்-கோயில்-0004.jpg
TVA_TEM_000331/TVA_TEM_000331_மேலக்கடம்பூர்_அமிர்தகடேசுவரர்-கோயில்-0005.jpg
TVA_TEM_000331/TVA_TEM_000331_மேலக்கடம்பூர்_அமிர்தகடேசுவரர்-கோயில்-0006.jpg
TVA_TEM_000331/TVA_TEM_000331_மேலக்கடம்பூர்_அமிர்தகடேசுவரர்-கோயில்-0007.jpg
TVA_TEM_000331/TVA_TEM_000331_மேலக்கடம்பூர்_அமிர்தகடேசுவரர்-கோயில்-0008.jpg
|